| சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற செல்க, தேரே-நல் வலம் பெறுந! - பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி துறை விட்டன்ன தூமயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, 'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
| |
|
என்பது வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை மருதன் இளநாகனார். |
| | |
| ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப- தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன் மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல- துஞ்சா முழவின் கோவற் கோமான் நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! |
| |
|
என்பது மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற்
கீரத்தனார். |
| பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் கொடு |
|  |