| வினை, கழிய நன்னன், ஏற்றை நறும் பூண் அத்தி, துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, கண்டது நோனானாகி, திண் தேர்க் கணையன் அகப்பட, கழுமலம் தந்த பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர், பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, தண் குடவாயில் அன்னோள் பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
| |
|
என்பது வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப் பாகற்குச் சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார் |
| | |
| வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் காடு இறந்தனரே, காதலர். மாமை, அரி நுண் பசலை பாஅய், பீரத்து எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, காதலற் கெடுத்த சிறுமையொடு,நோய் கூர்ந்து, ஆதிமந்தி போல, பேதுற்று அலந்தனென் உழல்வென்கொல்லோ-பொலந்தார், கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய உடை மதில் ஓர் அரண் போல, அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
| |
|
என்பது வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது - பெயர்
இல்லை |
| | |
| சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய, அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், பிறரும், ஒருத்தி |
|  |