| யை நம் மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் கூறேம். வாழியர், எந்தை! செறுநர் களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; சென்றீ, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
| |
|
என்பது வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில்
மறுத்தது.- அள்ளூர் நன்முல்லையார். |
| | |
| அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப வினை இவண் முடித்தனம்ஆயின், வல்விரைந்து எழு இனி-வாழிய நெஞ்சே!-ஒலிதலை அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து, கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், குறு நடைப் புறவின் செங் காற் சேவல் நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் புலம்பொடு வந்த புன்கண் மாலை, 'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி, இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச் சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் வேய் புரை பணைத் தோள், பாயும் நோய் அசா வீட, முயங்குகம் பலவே. |
| |
|
என்பது தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது.
- ஆலம்பேரி சாத்தனார். |
| | |
| 'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், 'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம் யானும் தெற்றென உணரேன், மேல் நாள், மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, 'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற- ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் ஊசி போகிய சூழ் செய் மாலையன், பக்கம் சேர்த்திய செச் |
|  |