| சைக் கண்ணியன், குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, வரி புனை வில்லன், ஒரு கணை தெரிந்து கொண்டு, ‘யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, நாணி நின்றனெமாக, பேணி, 'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப் பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன் மகனே தோழி!' என்றனள். அதன் அளவு உண்டு கோள், மதி வல்லோர்க்கே. |
| |
|
என்பது செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால்
முடக் கொற்றனார் |
| | |
| 'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் அளியும், அன்பும், சாயலும், இயல்பும், முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என, கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, குறுக வந்து, குவவுநுதல் நீவி, மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள் நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ! விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் காடு உடன்கழிதல் அறியின்-தந்தை அல்குபதம் மிகுந்த கடிஉடை வியல் நகர், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, கோதை ஆயமொடு ஓரை தழீஇ, தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே! |
| |
|
என்பது உடன் போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய்
மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார் |
| | |
| கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, பகலும் நம்வயின் |
|  |