|
அகலானாகிப் பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, 'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது, மல்லல் மூதூர் மறையினை சென்று, சொல்லின் எவனோ-பாண! 'எல்லி மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என, கண் நிறை நீர் கொடு கரக்கும், ஒண் நுதல் அரிவை, ‘யான் என்செய்கோ?’ எனவே.
என்பது தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி, எருவைச் சேவல் கரிபு சிறை தீய, வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் பிரியின் புணர்வது ஆயின், பிரியாது, ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப, நினை மாண் நெஞ்சம்!-நீங்குதல் மறந்தே.
என்பது பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லியது.- பெருந்தேவனார்
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் சிலையுடை இடத்தர் போதரும் நாடன் நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு அறிவிப்பேம் கொல்? அறியலெம்கொல்?' என இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் சேர்ந்தன்று-வாழி, தோழி!-'யாக்கை இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோய்' எனச் செப்பாதீமே.
என்பது தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,
'அறத்தொடு நிற்கும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங்
கிழார். |