| தில், வாழி-தோழி!-அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, கறை அடி மடப் பிடி கானத்து அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், நறவு நொடை நல்இல் புதவு முதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, எய்த வந்தனவால் தாமே நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
| |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
கல்லாடனார் |
| | |
| மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, தாழ் பெயற் பெருநீர், வலன் ஏர்பு, வளைஇ, மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர இரு நிலம் கவினிய ஏமுறு காலை - நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் சீறூரோளே, ஒண்ணுதல்!-யாமே, எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, வினைவயின் பெயர்க்கும் தானை, புனைதார், வேந்தன் பாசறையேமே! |
| |
|
என்பது தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை
எழுத்தாளன் |
| | |
| 'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, ஆழல் - வாழி, தோழி!-'சாரல், ஈன்று நாள் உலந்த மெல்ந |
|  |