|
| தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந்தலை, உருத்து எழு குரல குடிஞைச் சேவல், புல் சாய் விடரகம் புலம்ப, வரைய கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், சிள் வீடு கறங்கும் சிறியிலை வேலத்து ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, களரி பரந்த கல் நெடு மருங்கின், விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் மை படு திண் தோள் மலிர வாட்டி, பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள்கொல்லோ தானே-தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், இடு மணற் பந்தருள் இயலும், நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |