| பாம்பின் திருமணி விளக்கின் பெறுகுவை- இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
| |
|
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப்
பாலாசிரியர் நற்றாமனார். |
| | |
| கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்; அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி கூடல் நாள் அங்காடி நாறும் நறு நுதல் நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு, வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர், நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து, நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, முயங்குகம் சென்மோ-நெஞ்சே!-வரி - நுதல் வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி, ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கை, கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை. தெண் நீர் உயர் கரைக் குவைஇய தண் ஆன் பொருநை மணலினும் பலவே. |
| |
|
என்பது வினைமுற்றி மீளலுறும் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார். |
| | |
| தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, வான் எனப் பூத்த பானாட் கங்குல், மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், ஐது படு கொள்ளி அங்கை காய, குறுநரி உளம்பும் கூர் இருள், நெடு விளி சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல், இரும் பல் கூந்தல், |
|  |