|
நுதற் பசப்பே?
என்பது இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, காமர் சேவல் ஏமம் சேப்ப; முளி அரில் புலம்பப் போகி, முனாஅது முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம் வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக நம்மொடு பசலை நோற்று, தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?
என்பது தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.-
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்.
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் வென் வேல் இளையர் இன்புற, வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், வாங்கு சினை பொலிய ஏறி; புதல பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை இனிது செய்தனையால்-எந்தை! வாழிய!- பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் ஆய் தொடி அரிவை கூந்தற் போது குரல் அணிய வேய்தந்தோயே!
என்பது வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.-
மதுரை மருதன் இளநாகனார்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலைத்
|