| தொடலை தைஇ, மெல்லென நல் வரை நாடன் தற்பாராட்ட யாங்கு வல்லுநள்கொல் தானே-தேம் பெய்து, மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் முகை தலை திறந்த வேனிற் பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
| |
|
என்பது மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார். |
| | |
| எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப-நாம் அது செய்யாம்ஆயினும், உய்யாமையின், செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ-தோழி!- ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே. |
| |
|
என்பது தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
| | |
| நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் வல் ஆண் அருமுனை நீந்தி, அல்லாந்து, உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|  |