| ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, மரை கடிந்து ஊட்டும் வரையகச் சீறூர் மாலை இன் துணைஆகி, காலைப் பசுநனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, மணமனை கமழும் கானம் துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
என்பது தோழி
தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச்
சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
|
| புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் வரைமுதல் சிதறியவை போல், யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, படுமழை பொழிந்த பானாட் கங்குல், ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் இருளிடைத் தமியன் வருதல் யாவதும் அருளான்-வாழி, தோழி!-அல்கல் விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், காயா மென் சினை தோய நீடிப் பல் துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள் அணி மலர் நறுந்தாது ஊதும் தும்பி கை ஆடு வட்டின் தோன்றும் மை ஆடு சென்னிய மலை கிழவோனே. |
|
என்பது தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த்
தோழி சொல்லியது.
|
| பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே- கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் காடு கால்யாத்த நீடு மரச் சோலை விழைவெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, வெண் நுனைஅம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் |
|  |