புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   521
Zoom In NormalZoom Out

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.
 

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.

............................மதுரைப் பேராலவாயார் பாடியது.

தலைத்தோற்றமாவது:-
 

‘’உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று’’ 

(பு. வெ.12)
 

(இ - ள்.)மதுவையும் அலைத்துண்ணும்படி  பிழிமின்;  ஆட்டுவிடை
யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய
பந்தரின்கண்   நீர்  கொழித்துக்  கொடுவரப்பட்ட  இளைய  மணலை
நிரம்பப்    பரப்புமின்;    பகைவரது    தூசிப்படையை    முறித்துப்
பெயர்ந்துபோகிற   தனது   படைக்குப்பின்னே   நின்று  நிரையுடனே
வருகின்ற  என்  இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர்
அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று.

சாயல் - விடாயாலுண்டான மென்மை.

என்னைக்கு   உழையோர்   தன்னினும்   பெருஞ்சாயலர்;  அவர்க்கு
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக.
 

(263)

பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்

இரும்பறை யி