|
| மார்பிற் றாருங் கொன்றை |
| ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த |
| சீர்கெழு கொடியு மவ்வே றென்ப |
| கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை |
| மறைநவி லந்தணர் நுவலவும் படுமே |
| பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத் |
| தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும |
| பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை |
| பதினெண் கணனு மேத்தவும் படுமே |
| எல்லா வுயிர்க்கு மேம மாகிய |
| நீரற வறியாக் கரகத்துத் |
| தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. |
கடவுள் வாழ்த்து.
|
பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது.
|
இதன் பொருள் - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக் கொன்றைப்பூ; ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு; மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்று சொல்லுவர்; நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறுப்பு, தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின், வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண் வடிவு ஒருபக்கமாயிற்று; ஆய அவ்வடிவுதான், தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை, திருநுதற்கு அழகாயது. அப்பிறைதான் பெரியோன் சூடுதலால், பதினெண் கணங்களாலும் புகழவும்படும்; எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய, நீர் தொலைவறியாக் குண்டிகையானும் தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடையோனுக்கு - என்றவாறு. |
தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்குமென்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன் |
 |