புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   541
Zoom In NormalZoom Out

இருப்பினையும்,     கையாற்கவிக்கப்பட்ட   கண்ணாற்  குறித்துப்
பார்க்கும்     பார்வையையும்,    செவ்விய    தொடை    பிழையாத
தறுகண்மையையுமுடைய  மறவர்தாம்  அம்பை விடுதலாற் பட்டோரது
உடன்மூடிய புதியகற்குவையின்மேலே திருந்திய சிறகினையும் வளைந்த
வாயினையுமுடைய       பருந்திருந்து                வருந்தும்
உன்னமரத்தினையுடையவாகிய     அணுகுதற்கரிய        கவர்த்த
வழியின்கண்ணே நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்;
அங்ஙனம் வருவது, அவர் மனக்குறிப்பை அவர்
 

முகத்தானறிந்து  அவருடைய  வறுமையைத்   தீர்த்தலை   வல்ல
தன்மையான் - எ - று.
 

நுதலையும்     திறலையும்     கடாத்தையும்      மருங்கையும்
பெருங்கையையும் உடைய யானைப்பிடர்த்தலையிருந்து எயிறுபடையாக
எயிற்கதவிடாக் கூற்றத்து அருந்தொழில் சாயாப்பெரும்பெயர்வழுதியென
மாறிக் கூட்டுக: காலாலடுதல் கையாலூக்குதலன்றி   எயிறு   படையாக
எயிற்கதவிடக்கை   விடாத      பெருங்கையானையென    இயைத்
துரைப்பினுமமையும்;  எயிற்கதவிடாஅக்    கயிறுபிணிக்கொண்டவென இயைத்துரைப்பாருமுளர்.
 

ஊரில்ல     உயவரிய  நீரில்ல    நீளிடையவாகிய  உன்னமரத்த
கவலையெனவும்,     பருந்திருந்துயவும்    துன்னருங்கவலையெனவும்
இயையும்.
 

மருக,     கணவ,  வழுதி, மார்ப, இரவலர் வருவர்; அஃது அவர்
இன்மை  தீர்த்தல்வன்மையான்; அதனால், நின்சொற் பெயராதொழியல்
வேண்டுமெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.
 

வாழ்த்தியலாதல்  விளங்க,   வேண்டுமென     ஒரு     சொல்
தந்துரைக்கப்பட்டது.
 

(4)

வாள், வலந்தர மறுப்பட்டன

செவ்வானத்து வனப்புப்போன்றன

தாள், களங்கொளக்