கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன தோல், துவைத்தம்பிற் துளைதோன்றுவ நிலைக்கொராஅ விலக்கம் போன்றன மாவே, எறிபதத்தா னிடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயான் எருத்துவவ்விய புலிபோன்றன களிறு, கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டான் உயிருண்ணுங் கூற்றுப்போன்றன நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கட னிவந்தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ அனையை யாகன் மாறே தாயி றூவாக் குழவி போல ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே. திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை. சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியது. |