கண்டஞான்று நின் உடம்பு பெறுவாயாகென அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்றுநின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது. |
(இ - ள்.) எருமைபோலும் வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப் பரக்கும் யானையையுடையவாய் வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்! பெரும! நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தையுடையனாதலால், நினக்கு ஒரு காரியஞ் சொல்வேன்; அதனைக் கேட்பாயாக; அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்தாரைநீங்காத நரகத்தைத் தமக்கிடமாகக் கொள்பவரோடு பொருந்தாது நீ காக்கப்படும் தேயத்தைக் குழவியை வளர்ப்பாரைப்போலப் பாதுகாப்பாயாக; அளிக்கத்தக்க தொன்று அக்காவல்; அது பெறுதற்கரிது, எ - று. |
காவலென்றது (7) ஆகுபெயர். நாடனை (3) : ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. ஓவும், ஓரும் : அசைநிலை.
|
அருளாவது: - ஒன்றின் துயர்கண்டாற் காரணமின்றித் தோன்றும் இரக்கம்(தொல். பொருள். 53, ந.) |
அன்பாவது: - தன்னாற் புரக்கப்படுவார் மேலுளதாகிய காதல்.(தொல். பொருள். 53, ந.) |
இனி, ஓகாரத்தைப் பிரித்து வினாவாக்கிக் கோப்பெருஞ்சேரலிரும் பொறையைக் கண்டஞான்று நின்னுடம்புபெறுவாயெனத் தம்முடம்பு பெற்றமை தோன்ற, நீயோவென வினாவினாராக்கியுரைப்பாருமுளர். |
காவல்குழவிகொள்பவரினோம்பென்றமையாற் செவியறிவுறூஉவும், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரொடொன்றா தென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சியுமாயிற்று. |
| (6) | வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் |
| தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும் |
| குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் |
| குடாஅது தொன்றுமுதிர் |
 |