துனித்த ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; வென்று வென்றிமுழுதையும் வியவாது நின்மனத்தே உட்கொண்ட தணியாத வண்மையையுடைய தகுதிமாட்சிமைப்பட்ட குடுமி! குளிர்ந்த சுடரையுடைய திங்களையொப்பவும் சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் நிலைபெறுவாயாக, நீ உலகத்தின்மேல் - எ - று. |
வடாது (1) என்னும் முற்றுவினைக்குறிப்பைப் பெயர்ப்படுத்தி, பனிபடு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன்வடக்குமென்க; ஒழிந்தனவுமன்ன. |
மேலது துறக்கத்தின் மேலுமென்பார், அதற்கு மேலதாகிய ஆனிலையுலகத்தானும் (7) என்றார். உரு (8) என்பது, இவனாணையாற் பிறரஞ்சும் உட்குடைமை. |
அத்தை (23) யும், ஆங்க (25) வும் அசைநிலை. |
குடுமி! பெரும! உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றாதொழிக; நிற்றிறஞ் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசின் மாக்கட்கு நல்கி மதியம்போலவும், ஞாயிறுபோலவும் நீ நிலத்தின்மிசை மன்னுக வெனக்கூட்டி வினைமுடிவு செய்க. |
தேஎத்து (11) என்பதனுள், அத்தை அசைநிலையாக்கி, தேயம் கடற்படைக்குள்ளே குளிப்பவென்றுரைப்பாருமுளர். |
ஞமன் (9) - யமனெனினுமமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை (12) யென்று பாடமோதி, கொலையைச்செய்யும் புகரையுடைய யானையெனினும் அமையும். |
ஆகி (8) , ஆகவெனத் திரிந்துநின்றது; ஆகியென்பதனைத் திரியாது, நிற்றிறஞ் சிறக்க (10) என்பதனோடு இயைத்துரைப்பாரும் உளர். நின்றிறம், நிற்றிறமென வலிந்து நின்றது. |
நகர்வலஞ்செயற்குப் பணியியரென வீடும், ஏந்துகையெதிர் இறைஞ்சுகவென அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று. |
இஃது, இவ்வாறு செய்கவென அரசியல் |
 |