புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   551
Zoom In NormalZoom Out

களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு
எதிர்ந்து    பட்டோரில்லாமையான்,    எனக்கு   உணவாகிய   தசை
பெற்றிலேன்‘     எனத்     தான்    பேய்மகளானமை    தோன்றப்
பரிசில்கடாயினாளெனவுங் கூறுவாருமுளர்.
 

‘பாடினிக்கு,.....பாண்மகன்’     என்பது, ‘அதுவெனுருபுகெடக் குகரம்
வந்தது;   உயர்திணையாகலின்.   பாடினிபாடலுக்கேற்பக்  கொளைவல்
பாண்மகனெனினும்   அமையும்.  எனவும்,  ஆங்கும்  :  அசைநிலை;
பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன.
 

(12)

பாணர் தாமரை மலையவும் புலவர்

பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்

அறனோ மற்றிது விறன்மாண் குடுமி

இன்னா வாகப் பிறர்மண்கொண்

டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.
 

திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)

பாண்டியன்  பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை
நெட்டிமையார் பாடியது.
 

(இ - ள்.) பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும், புலவர் பட்டம்
பொலிந்த   மத்தகத்தையுடைய   யானையுடனே   அலங்கரிக்கப்பட்ட
தேரினை  ஏறுதற்கேற்ப  அமைக்கவும்,  அறனோ இவ்வாறு செய்தல்?
வென்றி  மாட்சிமைப்பட்ட குடுமி! வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு
இன்னாவாகக்  கொண்டு  நின்னுடைய  பரிசிலரிடத்து  இனியவற்றைச்
செய்வை - எ - று.
 

குடுமி! பிறர்மண் இன்னாவாகக்கொண்டு,  மலையவும்  பண்ணவும்
நின் ஆர்வலர் முகத்து இனியசெய்வை; இது