புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   552
Zoom In NormalZoom Out

சொல்லுவாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. 
 

மற்று : அசைநிலை.
 

இது பழித்ததுபோலப் புகழ்ந்ததாகக் கொள்க.
  

(13)

இவனியா ரென்குவை யாயி னிவனே

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்

மறலி யன்ன களிற்றுமிசை யோனே

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்

பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்

சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப

மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

நோயில னாகிப் பெயர்கதி லம்ம

பழன மஞ்ஞை யுகுத்த பீலி

கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்

கொழுமீன் விளைந்த கள்ளின்

விழுநீர் வேலி நாடுகிழ வோனே. 
 

திணை - பாடாண்டிணை; துறை - வாழ்த்தியல்.
 

சோழன்  முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி     கருவூரிடஞ்
செல்வானைக் கண்டு   சேரமானந்துவஞ்சேரலிரும்பொறையொடு
வேண்மாடத்து மேலிருந்து உறையூர்  ஏணிச்சேரி முடமோசியார்
பாடியது.
 
 

(இ  -  ள்.)  இவன்  யாரென்று  வினவுவாயாயின்,  இவன்றான்,
புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி பொலிந்த கொளுத்தற
எய்த  அம்புகள் போழப்பட்ட பரந்துயர்ந்த மார்பினையுடைய கூற்றம்
போன்ற    களிற்றின்மேலோன்;    இக்களிறுதான்,   கடலின்கண்ணே
இயங்கும்