தடக்கை |
புலவுநாற்றத்த பைந்தடி |
பூநாற்றத்த புகைகொளீஇ யூன்றுவை |
கறிசோறுண்டு வருந்துதொழி லல்லது |
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் |
மெல்லிய பெரும தாமேநல்லவர்க் |
காரணங் காகிய மார்பிற் பொருநர்க் |
கிருநிலத் தன்ன நோன்மைச் |
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. |
திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) |
சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன் கபிலர் கைப்பற்றி, ‘மெல்லியவாமால் நுங்கை’ எனக் கபிலர் பாடியது. |
(இ - ள்.) வன்கண்மையை உடைய கொலையானையாலே காவலை யுடைய கணையமரத்தை முறித்து இரும்பாற் செய்யப்பட்ட அழகுசெய்த அங்குசத்தால் முன்னர்க் கடாவி அதுசெய்யும் வினையைப் பின்வேண்டு மளவிலே பிடிக்கவும், வலிய நிலத்தைக் குந்தாலியால் இடித்துச்செய்த குழிந்த கிடங்கின்கண் நீர்ப்பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதி அதன்கட் செல்லாமல் மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசை தாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும், அம்பறாத்தூணிபொருந்திய முதுகையுடையையாய்த் தேர்மேலே நின்று வில்லினது வலியநாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களை அளிக்கவும், தலைவ! வலியவாகும் நின் முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள்; புலானாற்றத்தை யுடையவாகிய செவ்வித்தடியைப் பூநாற்றத்தவாகிய புகையைக் |
 |