துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு செயலறியா வாகலான், அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும ! பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும் பொருவார்க்குத் துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையும் உடைய, போரின்கண்ணே மிக்க சேயையொப்பாய்! நின்னைப் பாடுவாருடைய கைகள் - எ - று. |
கொளீஇ (13) என்னுமெச்சம் அமைத்தவென்னும் ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது; கொளுத்தவெனத் திரித்து, அவ்வூனென ஒரு சுட்டு வருவித்து அதனோடு முடிப்பினும் அமையும். |
உண்டு (14) என்பது பொதுவினையன்றேனும் கறியொழிந்த வற்றிற்கெல்லாம் சேறலின், பன்மைபற்றி அமைத்துக்கொள்ளப்படும். ஊன் துவை கறியொடுகூடிய சோற்றை உண்டென உரைப்பினும் அமையும் ; இதனைப் பொதுவினையென்று உரைப்பாருமுளர். |
குரிசில்! பெரும! சேஎய்! வலியவாகும் நின்கை; நிற்பாடுநர்கைதாம் மெல்லியவாகுமெனக் கூட்டுக. |
இனி, மாதாங்கவும் (7) என்பதற்கு அகழியைக்கடக்கப்பாய்தற்குக் குதிரைக்குசையைத் தாங்கி எடுத்துவிடவு மென்றுரைப்பாருமுளர். |
பாடுநர் (19) எனத் தம்மைப் படர்க்கையாகக் கூறினார். |
தம் கையின் மென்மையது இயல்புகூறுவார், அரசன்கையின் வலிய இயல்புங் கூறினமையான், இஃது இயன்மொழியாயிற்று, |
(15) | கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லி |
|
 |