புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   568
Zoom In NormalZoom Out

முதற்கைகொடுக்கும்     வண்டுமொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய
கானலிடத்துக்  கடன்முள்ளிப்பூவாற்  செய்யப்பட்ட  மாலையையுடைய
விளங்கிய  வளையையணிந்த  மகளிர்  பெரிய  பனையினது  நுங்கின்
நீரும்     பொலிவினையுடைய      கரும்பினது      இனியசாறும்
உயர்ந்தமணலிடத்துத்  திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக்
கலந்து  இம்மூன்று நீரையும் உண்டு மூன்று நீரையுடைய கடற்கண்ணே
பாயும்   பரிக்கவொண்ணாத   பலமக்களும்  வாழ்தலையுடைய  நல்ல
ஊர்கள்  பொருந்திய  பொருளைப்  பாதுகாவாத  வண்மையையுடைய
பெரிய  வேளாகிய  எவ்வியது  நீர்வழங்கும்  வாய்த்தலைகளையுடைய
மிழலைக்கூற்றத்துடனே     வயலிடத்துக்     கயலைமேயும்    நாரை
போரின்கண்ணே  உறங்கும் பொன்னணிந்த யானையையுடைய பழைய
முதிர்ந்த    வேளிரது    திரண்ட   நெல்லினையுடைய   முத்தூற்றுக்
கூற்றத்தைக்கொண்ட   வெற்றிபொருந்திய   உயர்ந்த  குடையினையும்
கொடியாற்பொலிந்த  தேரினையும்  உடைய செழிய! நின்றுநிலைப்பதாக
நினது  நாளாகிய மீன்; நில்லாது பட்டுப் போவதாக நின்பகைவருடைய
நாளாகிய  மீன்; நின்னொடு பழைதாய் முதிர்ந்த உயிரினும் உயிருடனே
நின்று முதிர்ந்த உடம்பு போன்ற நினது வெற்றிக்குடியோடு மூத்த சீரிய
குடியின்கட்  சிறந்த  வாட்போராலே  வாழ்வார் நினது முயற்சிவலியை
வாழ்த்த   இரக்கும்   பரிசிலர்  நின்வண்மையைச்  சொல்ல  ஒள்ளிய
வளையையுடைய   மகளிர்   பொற்கலத்தின்கண்   ஏந்திய  குளிர்ந்த
நறுநாற்றத்தையுடைய  மதுவை  மடுப்ப அதனையுண்டு  மகிழ்ச்சிமிக்கு
அப்படி இனிதாக நடப்பாயாக;