புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   573
Zoom In NormalZoom Out

நிறுத்துதலை  விரும்பினும், அவ்வேட்கைக்குத் தக்க செய்கையைக்
கேட்பாயாக,    இப்பொழுது;   பெரியோய்! நீரை   இன்றியமையாத
உடம்பிற்கெல்லாம்   உணவு  கொடுத்தவர்கள்உயிரைக்  கொடுத்தார்;
உணவை   முதலாகவுடைத்து   அவ்வுணவால் உளதாகிய   உடம்பு;
ஆதலால்,   உணவென்று   சொல்லப்படுவது நிலத்தோடுகூடிய  நீர்;
அந்நீரையும்  நிலத்தையும்  ஒருவழிக்  கூட்டினவர்கள்  இவ்வுலகத்து
உடம்பையும்   உயிரையும்   படைத்தவராவர்;  நெல்  முதலாயவற்றை
வித்திமழையைப்  பார்த்திருக்கும் புல்லிய நிலம் (புன்செய்) இடமகன்ற
நிலத்தை    உடைத்தாயினும்   அது   பொருந்தியாளும்   அரசனது
முயற்சிக்குப் பயன்படாது; ஆதலால், கொல்லும் போரையுடைய செழிய!
இதனைக்  கடைப்பிடித்து  விரைந்து  நிலங்குழிந்தவிடத்தே  நீர்நிலை
மிகும்   பரிசு  தளைத்தோர்,  தாம்  செல்லும்  உலகத்துச்  செல்வம்
முதலாகிய     மூன்றினையும்     இவ்வுலகத்துத்    தம்  பேரோடு
தளைத்தோராவார்;   அந்நீரைத்  தளையாதவர்;  இவ்வுலகத்துத்  தம்
பெயரைத் தளையாதோர் - எ - று.
 

இதனால், நீயும் நீர்நிலைபெருகத்தட்கவேண்டுமென்பது கருத்தாகக்
கொள்க.
  

மற்றும் (16), அம்மவும் (29) அசைநிலை.
  

உணவின்பிண்டம் உண்டி முதற்றாதலான், உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோர் (19 - 20) என மாறிக்கூட்டுக.
 

தள்ளாதோர்   இவட்டள்ளாதோராதலால் செழிய! இதனை இகழாது
வல்லே  செய்யென  ஒருசொல் வருவித்துரைப்பாரும் உளர். தட்டோர்
என்பதற்குத் தம் பெயரைத் தளைத்தோரெனினும் அமையும்.
 

நீரும் நி