(இ - ள்.) நின்னைப் பாடுவாரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ! நிலவெல்லையைக் கடந்த பாதலத்தேயுற ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும் உயர்ச்சியான் வானைப்பொருந்துவது போன்ற மதிலையும் அவ்வானிடத்து மீனைப்பூத்தாற்போன்ற வடிவையுடைய சூட்டினையும் வெயிற்கதிர் நுழையாத மரஞ்செறிந்த காவற்காட்டினையும் உடைத்தாய் அணைதற்கரிய சிற்றரண்களாற் சூழப்பட்ட கானப்பேரென்னும் அரண், வலிய கையையுடைய கொல்லனாற் செந்தீயின் கண்ணே மாட்டப்பட்ட இரும்புண்ட நீரினும் மீட்டற்கரிதெனக்கருதி வேங்கை மார்பன் வருந்த நாடோறும் வென்றிகொளத் தழைத்த தும்பையையுடைய, புலவர் பாடப்படுந் துறைகளை முடித்த வெற்றியினையுடைய வேந்தே! நின்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே போன்ற வெற்றிப் புகழுடனே விளங்கிப் பொலிவதாக நின் வேல்- எ - று. |