புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   580
Zoom In NormalZoom Out

பட்டொலிக்கும்     மணியுடனே உயர்ந்த கோட்டினையுடையனவும்
பிறை    வடிவாக   இடப்பட்ட   மத்தகத்துடனே   சினம்பொருந்திய
பார்வையையுடையனவும்     பரந்த       அடியுடனே      பரிய
கழுத்தையுடையனவும்   தேனழிந்த   மலைபோலத்  தேனீயொலிக்கும்
மணம்    நாறும்    மதத்துடனே    புண்வழலை   வடியும்   பெரிய
தலையையுடையனவுமாகிய    வலிமிக்க    இளங்களிறு   கம்பத்தைப்
பொருந்தித்  தான் நின்றநிலையிலே நின்று அசையப் பக்கத்தே நின்று
கிரணத்தை  விடுகின்ற  வானத்தின்கண்ணே  தங்கும்  திங்கள்போலும்
முத்தமாலையையுடைய    வெண்கொற்றக்குடையினது   நிழற்கண்ணே
தம்பக்கத்து  வாளில்லாதோர்  அக்குடையே காவலாக உறங்க அசைந்த
செந்நெற்கதிரால்    வேயப்பட்ட    மெல்லிய  கரும்பாற்கட்டப்பட்ட
ஒழுங்குபட்ட   கூரை   விழாவெடுத்துக்  கொள்ளப்பட்ட  இடம்போல்
வேறுவேறாகப்     பொலிவு     தோன்றக்     குற்று     அமையாத
உலக்கையொலியுடனே  மிக்க  ஆரவாரத்தையுடைய  அகன்றவிடத்துப்
பொன்னாற்   செய்யப்பட்ட   இதழையுடைய   பசிய  தும்பையுடனே
மிசையே   அசைந்த  தலையினையுடைய  பனந்தோட்டைச்  செருகிச்
சினத்தையுடைய     வீரர்    வெறியாடும்    குரவைக்    கூத்தொலி
ஓதத்தையுடைய     கடலொலி     போலக்    கிளர்ந்து  பொங்கப்
படைப்பெருமையாற் பகைவருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது
  

பரந்துகிடக்கின்ற   அகன்ற பாசறையிடத்துக் காவலாள! மாற்றரசர்
பணிந்துதந்த   திறையால்   தம்மை   அடைந்தவருடைய  சுற்றத்தை
நிறைக்கும்     உயர்ந்த    கொல்லிமலையோருடைய    அடுபொருந!
யானையினது நோக்குப்போலும்