நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நாப்பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமற் பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எங்கோவே! மாந்தரஞ்சேரலிரும்பொறை பாதுகாத்த நாடு தேவருலகத்தை யொக்குமென்று பிறர் சொல்லக் கேட்டு வந்து கட்கினிதாகக் கண்டேன்; பெருமானே! முயற்சி வெறுப்பில்லையாய் வேற்றுநாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே சோறுண்டாக நடப்பை; நீ மடியாயாதலான்-எ-று. |
கதிர்சோருமதியென இயையும்; கதிர்சோருமென்னும் சினைவினை மதியென்னும் முதலொடு முடிந்தது; கதிர்சோருமாலையென இயைப்பினும் அமையும். |
பாய்நின்றென்று பாடமோதுவாரும் உளர். |
கூரை பொலிவுதோன்றவென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. |
செரீஇயென்னும் வினையெச்சத்தை டுமெனஒருசொல் வருவித்து அதனோடுமுடிக்க. |
நிலைஇ வழங்கக் காப்புறங்கப் பொலிவுதோன்றப் பெயர்புபொங்க என்னும் செயவெனெச்சங்களும். வாய்காவாதென்னும் எதிர்மறை வினையெச்சமும் பரந்துபட்டவென்னும் பெயரெச்சவினையொடு முடிந்தன. |
காப்பாள! பொருந! சேஎய்! பெரும! எங்கோ! பெரும! நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பியநாடு புத்தேளுலகத்தற்றெனக் கேட்டுவந்து இனிது கண்டிசின்; நின்படைப்பு வாழியவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க; அன்றி, எங்கோவே! நீ துஞ்சாதபடியாலே, இரும்பொறையோம்பியநாடு புத்தேளுலகத்தற்றெனப் |
 |