இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே மதுவையுண்டு தெளிந்த கடலினது ஒலிக்குந்திரையின் இனிய சீராகிய தாளத்தேயாடும் மென்புலத்தூர்களையுடையநல்ல நாட்டுக்கு வேந்தே! பல பழத்தையும் நச்சித் தாம் வாழ்தற்கிடமாகிய ஆகாயத்தின் கண்ணே உயரப்பறந்து பெரிய மலையின்முழை எதிரொலி முழங்கச் சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரியமரம் பழுத்துமாறிற்றாக வருந்திப் பழம் பெறாதே மீளும் புள்ளினத்தையொப்ப நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து நின்புகழைக் கூறும் பரிசிலேன் யான்வறியேனாய் மீளக்கடவேனோ? வாட்போரின்கண் மேம்படுவோய்? நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான் அதற்கு வருந்துவேனல்லேன்; அது நிற்க, நோயின்றியிருப்பாயாக; பெரும! நம்மிடத்து உளதாகிய அணிய அணுமையைக் காண்பதாக, நாடோறும் நறிய பலவாகிய தழைத்த மயிரையும் தேன்போலுஞ் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தினையும் உடைய மகளிர் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம்பார்க்கும் பெரிய மலைபோலும் மார்பினையுடைய போரைவிரும்பும் சேயையொப்பாய்! நினது மகிழ்ச்சியையுடைய நாளோலக்கம்-எ - று. |