கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின் |
உள்ளியது முடித்தோய் மன்ற முன்னாட் |
கையுள் ளதுபோற் காட்டி வழிநாட் |
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் |
நாணா யாயினு நாணக் கூறியென் |
நுணங்கு செந்நா வணங்க வேத்திப் |
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின |
ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச் |
செல்வ லத்தை யானே வைகலும் |
வல்சியின்மையின் வயின்வயின் மாறி |
இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பிற் |
பாஅ லின்மையிற் பல்பாடு சுவைத்து |
முலைக்கோண் மறந்த புதல்வனொடு |
மனைத்தொலைந் திருந்தவென் வாணுதற் படர்ந்தே. |
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பரிசில்கடாநிலை) |
அவனை அவர் பாடியது, |
(இ - ள்.) அஞ்சத்தக்க முறைமையையுடைய வெய்ய சினத்தையுடைய மழையின்கண் உள்ள இடியேறு, அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய, நிலவகலத்தை நின்றுபார்ப்பதுபோன்ற நீண்டமலை பிறழச் சிறுமலைதூவ எறியும் ஓசைபோல வீரமுரசு கிளர்ந்தொலிக்கும் படையுடனே மேற்சென்று வேந்தர் பட எதிர் நின்றுகொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளியையாதலால் எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவன் இவனென்று நின்னைநினைந்துவந்த உயர்ந்த நிலைமையையுடைய பரிசிலேனாகிய யான் நினக்கு எம்மை எதிரேற்றுக்கொள்ளா மாந்தரது கொடுமையைச் சொல்லவும் நின்னுடைய நினைவேசெய்தாய், நிச்சயமாக; முன்னைநாட் பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டிப் |
 |