புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   821
Zoom In NormalZoom Out

பெற்றுநின்ற  நினது   புறநிலைமைக்கு  யான்வருந்திய வருத்தத்திற்கு
நீதான்   நாணாயாயினும்   நீ   நாணச்சொல்லி   எனது   நுண்ணிய
ஆராய்ச்சியையுடைய  செவ்விய  நா  வருந்தப்  புகழ்ந்து  நாடோறும்
பாடப் பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை ஏற்றுக்கொண்ட நினது
வென்றி பொருந்திய  அகன்றமார்பை  வணங்கி  வாழ்த்திப்போவேன்
யான்;  நாடோறும்  உணவில்லாமையான்  இடந்தோறும்  இடந்தோறும்
மாறிமாறி    அகழ்தலால்    இல்லெலி    மடிந்த    பழையசுவராகிய
எல்லையையுடைய,     பாலில்லாமையாற்     பலபடி     சுவைத்து
முலையுண்டலை    வெறுத்த    பிள்ளையுடனே   மனையின்கண்ணே
வறுமையுற்றிருந்த  என்னுடைய  ஒளிபொருந்திய  நுதலையுடையாளை
நினைந்து-எ - று.
 

தோன்றல்!  நின்  உள்ளி  வந்த  பரிசிலேனாகிய நான் கூற, நின்
உள்ளியது  செய்தாயாதலான்  வருத்தங்  கூறி  ஏத்தித் தொழுதனென்
பழிச்சி  வரைப்பின்  மனைக்கண்ணே  புதல்வனொடு தொலைந்திருந்த
என்  வாணுதலை  நினைந்துசெல்வல்  யானெனக் கூட்டி வினைமுடிவு
செய்க.
 

நாணக்கூறியென்றதன்பின்னே  ஏத்திப்    பழிச்சிச்    செல்வலென்
றமையான், அவை குறிப்புமொழி. வரைப்பின் மனையென இயையும்.
 

‘வள்ளிய  னாகலின்  வணங்குவ  னிவனென’ என்று  பாடமாயின்,
வண்மையையுடையனாதலால்     இவன்      எமக்குத்     தாழ்ந்து
பரிசிலளிப்பனெனக் கருதியென்க.
 

‘வள்ளியை  யாகலின்  வணங்குவ  னிவனெனக், கொள்ளா மாந்தர்
கொடுமை  கூற’  என்றதற்கு  வள்ளியையாதலின்  இவனை  வணங்கு
வேனென  நினைந்துவணங்க  அதுபாராது  நின்பாற்  பரிசில்  பெறாத
மாந்தர்.தூவவெறியுமென்பது,   தூவெறியுமென   வகரங்கெட  முடிதல்
புறநடையாற்கொள்க; விகாரமெனினும் அமையும்.
 

‘தூவவெறியும்’என்பதூஉம் பாடம்.
 

புறநிலை என்பதற்குப்