புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   822
Zoom In NormalZoom Out

புறங்கடை நினறநிலையென்றுமாம்.

‘இல்லெலி   மடிந்த   தொல்சுவர்’  என்பதற்கு    இல்லெலிதான்
தொழில்மடிந்த தொல்சுவரென்று உரைப்பினும் அமையும்.

நின்னைக் கொடுமை கூறவென்று உரைப்பினும் அமையும்.
 

(212)

நுங்கோ யாரென வினவி னெங்கோக்

களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீட வாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெருநகை வைகலு நக்கே.
 

திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)

கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
 

(இ - ள்.)  உம்முடைய  இறைவன் யார்தானென்று கேட்பீராயின்,
எம்முடைய    இறைவன்    களமர்க்கு    அரிக்கப்பட்ட   முதிர்ந்த
விரும்பத்தக்க மதுவை  ஆமையிறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர்
உண்டு     ஆரன்மீனாகிய     கொழுவிய     சூட்டை     அழகிய
கதுப்பகத்தேயடக்கி  மதுவுண்ட  மயக்கத்தால் வைகுந்தொழிலொழியும்
நீங்காத     விழவினையுடைய     புது    வருவாயுளதாகிய    நல்ல
சோழநாட்டுள்ளும்  பாணருடைய  வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப்
பகையாய்       உறையூரென்னும்       படைவீட்டிடத்திருந்தான்,
கோப்பெருஞ்சோழன்;        புரையில்லாத       நட்பினையுடைய
பொத்தியென்னும்      புலவனொடு     கூடி     மெய்ம்மையார்ந்த
மிக்கமகிழ்ச்சியை நாடோறும் மகிழ்ந்து-எ - று.

நன்னாட்டுள்ளுமென்ற உம்மை சிறப்பும்மை.