புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   826
Zoom In NormalZoom Out

ஐயப்பாடு       நீங்கார்      அழுக்குச்செறிந்த     காட்சிநீங்காத
உள்ளத்தினையுடைய  தெளிவில்லாதோர்;   யானை  வேட்டைக்குப்
போவோன்     யானையையும்   எளிதாகப்பெறுவன்;      குறும்பூழ்
வேட்டைக்குப்   போவோன்   அது  பெறாதுவறிய   கையினனாயும்
வருவன்;  அதனால்  உயர்ந்த  விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத்
தாம்      செய்யப்பட்ட      நல்வினைக்கூற்றிலே       அதனை
அனுபவித்தலுண்டாமாயின்  அவர்க்கு  இருவினையும்  செய்யப்படாத
உம்பருலகத்தின்கண்     இன்பம்     அனுபவித்தலுங்      கூடும்;
அவ்வுலகத்தின்கண்  நுகர்ச்சியில்லையாயின்,  மாறிப்பிறத்தலிலேகூடும்
பிறப்பின்கண்     இன்மை    எய்தவுங்கூடும்;    மாறிப்பிறவாரென்று
சொல்லுவாருளராயின்  இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது
புகழைநிலைபெறுத்தி  வசையில்லாத  உடம்பொடு கூடிநின்று இறத்தல்
மிகத்   தலையாயது;   அதனால்  எவ்வாற்றானும்  நல்வினைசெய்தல்
அழகிது-எ - று.
 

உயர்ந்திசினோர்க்கென்னும்     நான்காவதன்றியும் உயர்ந்திசினோர்
செய்வினைமருங்கின்    எய்தலுண்டெனின்,   இவர்க்கு   நுகர்ச்சியுங்
கூடுமென்றுரைப்பினும் அமையும்.
 

‘பிறவாராயினும்’  என்னும்  உம்மை  அசைநிலை;   உம்மையின்றி
ஓதுவாரும் உளர்.
 

‘காட்சியொடு நீங்கா நெஞ்சத்து’ என்பதூஉம் பாடம்.
 

(215)

கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்

தாதெரு மறுகிற் போதொடு