துன்பமிகக் கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போனெனச் சொல்லி-எ - று. |
ஈத்தபுகழ் ஈதலாலுளதாகிய புகழெனவும், ஈத்தவன்பு ஈத்தற்கு ஏதுவாகிய அன்பெனவுங் கொள்க. |
வாய்மொழிப்புலவீர்! அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனாற் புரவலன் கல்லாயினனென ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. |
சாயல், மைந்து, புக்கிலென்பன ஆகுபெயர். புக்கில் :வினைத்தொகை. |
கேடென்பது கெடுவெனக் குறைந்து நின்றது. |
(222) | அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி |
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த |
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென |
என்னிவ ணொழித்த வன்பி லாள |
எண்ணா திருக்குவை யல்லை |
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே. |
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
|
அவனை, தன்மகன் பிறந்தபின் பெயர்த்துச் சென்று பொத்தியார் எனக்கு இடந்தாவென்று சொற்றது. |
(இ - ள்.) தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த வடிவினையுடையளாய் நின் நிழலினும் ஒரு பொழுதும் நீங்காத நீ விரும்பத்தக்க மனைவி பெறப்பட்ட புகழமைந்த பிள்ளையானவன் பிறந்தபின் வாவெனச்சொல்லி என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய என்னோடு உறவில்லாதவனே! உன்னோடு என்னிடை நட்பைக் கருதாதிருப்பையல்லை; புகழைவிரும்புவோய்! நீ |
 |