புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   834
Zoom In NormalZoom Out

எனக்குக் குறித்த இடம் யாது? சொல்லுவாயாக-எ-று.

மற்று : அசை.

அழல் போலப் பாடம் (ஒளி) செய்யும் மேனியெனினும் அமையும்.
 

(223)

பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித்

தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

கல்லாகியும்    இடங்கொடுத்த     கோப்பெருஞ்சோழனை
வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
 

(இ - ள்.)   பலர்க்கும்    அருளுடைமையான்    நிழலையொத்து
உலகத்தார்     மிகுத்துச்     சொல்ல     உலகத்தையாளுந்தன்மை
முடியச்செலுத்துதற்கு  மறுமையை  நினைத்தால்  முடிவுபோகாமையின்
வடக்கிருத்தற்கு  வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து உயிர்நீத்தலின்
நிலைபெற   நடப்பட்ட   கல்லான   இடத்தும்  இடங்கொடுத்தளிப்பர்
நிச்சயமாக;  உடம்போடு  இனியவுயிர்  விரும்பு  மாறுபோல விரும்பும்
உரிமையையுடைய   பழையதாகிய   நட்பையுடையோர்   தம்மிடத்தே
செல்லின்-எ - று.

மீக்கூறியென்பது   மீக்கூறவெனத்  திரிக்கப்பட்டது;   ஆணைகூறி
யென்றுமாம்.

தொன்னட்புடையோர் தம்முழைச்   செலின்,   இடங்கொடுத்தளிப்ப
வெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

அவன் நட்பினை வியந்து கூறியது.

(224)

அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம்

துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி
இரும்