கொல்லோ என அஞ்சி இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க முன்பு தூக்கணங்குருவியினது தூங்கப்பட்ட கூட்டையொப்ப ஒருபக்கத்தே தூங்கப்பட்ட வலத்திலே புரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே பள்ளியெழுச்சிக் காலத்தே தோன்றினும் அதனைக் கேட்டு இறந்துபடாது நோமளவினே னாயினேன் - எ - று. |
முன்பு நலங்கிள்ளிசேட்சென்னி கேட்குவன்கொல்லென ஒருசிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலாநிற்கப் பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேனெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. |
கேளினியென்றது நெஞ்சினை. |
‘வென்றிநுவலா’ என்றும், ‘காலைதோன்றின’ என்றும் பாடமோதுவாரும் உளர். |
(226) | செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் |
உற்றன் றாயினு முய்வின்று மாதோ |
பாடுநர் போலக் கைதொழு தேத்தி |
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார் |
மண்டமர் கடக்குந் தானைத் |
திண்டேர் வளவற் கொண்ட கூற்றே. |
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. |
(இ - ள்.) தன்மனத்துள்ளே கறுவுகொண்டதாயினும் வெளிப்பட நின்று வெகுண்டதாயினும் உற்றுநின்று கையோடு மெய்தீண்டி வருத்திற் றாயினும் அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுவாரைப்போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்; |
 |