பொன்னான் இயன்ற மாலையினையும் மண்டியபோரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும் திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று-எ - று. பொலந்தார் வளவனென இயையும். கூற்றம் இரந்ததாகல்வேண்டும்; இம்மூன்றினுள் ஒன்றுசெய்யினும் பிழைப்பின்றெனக் கூட்டுக. இஃது அவனாண்மை மிகுதியினையும் வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறு. |