புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   841
Zoom In NormalZoom Out

தக்காயெனக் கூட்டி வினைமுடிவு செய்க. 

இது சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின், ஆனந்தப்பையுளாயிற்று. 

(229) ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளரையிரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனியுய ரழுவத்துத்
தலைநாண்மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்
தொன்னாண்மீன் றுறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னா
தளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்
நோயில னாயி னன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப
அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே
மைந்துடை யானை கைவைத் துறங்கவும்
திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்
காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
மேலோ ருலக மெய்தின னாகலின்
ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்
தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்
களந்துகொடை யறியா வீகை
மணிவரை யன்ன மாஅ யோனே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

கோச்சேரமான்     யானைக்கட்சேஎய்     மாந்தரஞ்சேரல்
இரும்பொறை    இன்னநாளிற்றுஞ்சுமென   அஞ்சி,    அவன்
துஞ்சியவிடத்துக் கூடலூர் கிழார் பாடியது. 

(இ - ள்.) மேடவிராசிபொருந்திய  கார்த்திகைநாளின் முதற்காலின்
கண்  நிறைந்த  இருளையுடைய  பாதியிரவின்கண் முடப்பனைபோலும்
வடிவையுடைய அனுடநாளின்