புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   846
Zoom In NormalZoom Out

துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை  அவர்  பாடியது.  (அதியமான்  நெடுமானஞ்சியை
ஒளவையார் பாடியது).
 

(இ - ள்.) அவனையின்றிக் கழிகின்ற  காலையும் மாலையும் இனி
இல்லையாகுக ; யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஒருபயன்படாமையின்
அவை  யல்லவாக;  நடப்பட்ட  கல்லின்கட்  பீலியைச்  சூட்டி நாரால்
அரிக்கப்பட்ட  தேறலைச்  சிறிய  கலத்தான்  உகுப்பவும்  அதனைக்
கொள்வனோ,கொள்ளானோ சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய
நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று.

நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன்  நாரரி  சிறுகலத்துகுப்பவும்
கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
 

(233)

பொய்யா கியரோ பொய்யா கியரோ

பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்
போரடு தானை யெவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பலவென
வைகுறு விடிய லியம்பிய குரலே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

(இ - ள்.)  பொய்யாகுக;  பொய்யாகுக; பரந்த  அடியினையுடைய
யானையைப்  பரிசிலர்க்குக்  குறைவறக் கொடுக்கும் சீர்மைபொருந்திய
வலிய   முயற்சியையுடைய  அகுதையிடத்து  உளதாகிய  பொன்னாற்
செய்யப்பட்ட  ஆழிபோலப்  பொய்யாகுக;  பெரிய  பாண்சுற்றத்திற்கு
முதல்வன், பேரணிகலத்தினையுடைய,