| |
மன்னே |
அம்பொடு வேனுழை வழியெல்லாந்தானிற்கு மன்னே |
நரந்த நாறுந் தன்கையாற் |
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே |
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ |
இரப்போர் கையுளும் போகிப் |
புரப்போர் புன்கண் பாவை சோர |
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் |
சென்றுவீழ்ந் தன்றவன் |
அருநிறத் தியங்கிய வேலே |
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ |
இனிப், பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப் |
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் |
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் |
றீயாது வீயு முயிர்தவப் பலவே. |
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) |
அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. |
(இ - ள்.) சிறிய அளவினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்குத் தருவன்; அது கழிந்தது! பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான்; அது கழிந்தது! சோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! என்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்; அது கழிந்தது! அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பன்; அதுகழிந்ததே! தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும் தன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய |
 |