புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   851
Zoom In NormalZoom Out

 

வயிற்றினையும்   பரந்த   மார்பினையும்  பசிய   கண்ணினையும்
குச்சுப்புல்  நிரைத்தாற்போன்ற  நிறம்  பொருந்திய  மயிரினையுடைய
தாடியினையும்        செவியிறந்து        முன்னே      தாழ்ந்த
கதுப்பினையுமுடையனாய்    வில்லுடனே   யார்தான்   இவ்வளிக்கத்
தக்கான்றான்?  ஆராயின், ஊரைப்பெரிதும் நீங்கினதும் இலன்; தனக்கு
அரணெனக்  கருதிக்  காட்டைக் கைக்கொண்டதும் இலன்;இற்றைநாட்
காலையே  பொருந்தாதாரது  இனமாகிய  நிரை  போகின்ற இடத்தைப்
பார்த்துத்   தன்  கையாற்  குறித்து  மெல்ல  எண்ணிக் கரந்தையார்
செய்யும்பூசலை  மாற்றி  வில்லாலே கொடு போந்தனன்; அந்நிரைதாம்
மிகப்பலவேயாயினும்       என்னபயன்படும்      எத்தன்மைத்தும்,
பால்முதலியன பெய்யப்படாமையிற் சிறிதும் வெள்ளிய முகந்தோன்றாத
பானையைக்  காண்டலுடனே,  நாட்காலத்து  உறைதெறிப்பக் கடையும்
மத்தின்   ஒலியைக்   கேளாதபடி   பிறருக்கு   நேராகக்  கொடுத்தல்
வல்லனாயினான், அவனுக்கு?-எ - று.
 

பகைவர்  மேல்  நடக்கவொட்டாது எதிரில்  நின்று விலக்குதலின்,
‘செருப்பிடைச் சிறுபர லன்னன்’ எனப்பட்டான்.
 

‘அன்ன’  என்று  பாடமோதி, செருப்பிடைச்  சிறுபரலோசைபோல
நெடிய ஓசையையுடைய காலென்றுரைப்பாரும் உளர்.
 

யார்கொலென்றது அறியான்வினாதலன்றி வியப்பின்கண் வந்தது.
 

‘ஊர்பெரி திகந்தன்று மிலனே’ என்பது நிரைகோட்கடுமை.
 

சிறுபரலன்னன்  கவுளனாகிய அளியனானவன்றான் யார்கொல்லோ?
தேரின்  வில்லோடு  ஊர்பெரிது  இகந்தன்றும்  இலனாய்க் காடு கைக்
கொண்டதும்  இலனாய்நோக்கி  எண்ணி  மாற்றினான்;  மாற்றிக் குழிசி
காண்டலோடு     மத்தொலி     கேளாதோனாயினான்;    அவனுக்கு
அவைதாம்மிகப்பல வாயினும் என்னாம் எனக்கூட்டுக.
 

கேளாதோற்கென உருபுவிரித்து உரைப்பினும்