புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   858
Zoom In NormalZoom Out

கைம்மிஞ்சவென்றுமாம். 

(262) நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.

................மதுரைப் பேராலவாயார் பாடியது.

தலைத்தோற்றமாவது:- 

‘’உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று’’            (பு. வெ.12)
 

(இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடை
யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய
பந்தரின்கண்   நீர்  கொழித்துக்  கொடுவரப்பட்ட  இளைய  மணலை
நிரம்பப்    பரப்புமின்;    பகைவரது    தூசிப்படையை    முறித்துப்
பெயர்ந்துபோகிற   தனது   படைக்குப்பின்னே   நின்று  நிரையுடனே
வருகின்ற  என்  இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர்
அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று. 

சாயல் - விடாயாலுண்டான மென்மை. 

என்னைக்கு  உழையோர்  தன்னினும்  பெருஞ்சாயலர்;  அவர்க்கு
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக. 

(263) பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ்