| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 869 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 21... | மீன் பூத்தன்ன உருவ ஞாயில், கதிர் நுழைகல்லா மரம் பயில் கடிமிளை, அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய இரும்பு உண் நீரினும், மீட்டற்கு அரிது' என, வேங்கை மார்பன் இரங்க, வைகலும் ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர் பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே! இகழுநர் இசையொடு மாய, புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! |
| திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது. | |
| 22 | தூங்கு கையான் ஓங்கு நடைய, உறழ் மணியான் உயர் மருப்பின, பிறை நுதலான் செறல் நோக்கின, பா அடியான் பணை எருத்தின, தேன் சிதைந்த வரை போல, மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, அயறு சோரும் இருஞ் சென்னிய, மைந்து மலிந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்க; பாஅல் நின்று கதிர் சோரும் வான் உறையும் மதி போலும் மாலை வெண்குடை நீழலான், வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த ஆய் கரும்பின் கொடிக் கூரை, சாறு கொண்ட களம் போல, வேறு வேறு பொலிவு தோன்ற; குற்று ஆனா உலக்கையான் கலிச் சும்மை வியல் ஆங்கண், பொலந் தோட்டுப் பைந் தும்பை மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, சின மாந்தர் வெறிக் குரவை ஓத நீரின் பெயர்பு பொங்க; வாய் காவாது பரந்து பட்ட வியன் பாசறைக் காப்பாள! வேந்து தந்த பணி திறையான் சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், ஓங்கு கொல்லியோர், அடு பொருந! வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, நிற் பாடிய வயங்கு செந் நாப் பின் பிறர் இசை நுவலாமை, ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! 'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேள் உலகத்து அற்று' |