| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 875 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 33... | நல் நாட்டுள்ளும், ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; பாடுநர் வஞ்சி பாட, படையோர் தாது எரு மறுகின் பாசறை பொலிய, புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த மலரா மாலைப் பந்து கண்டன்ன ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை - வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, காம இருவர் அல்லது, யாமத்துத் தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், ஒதுக்குஇன் திணி மணற் புதுப் பூம் பள்ளி வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
| திணை: வாகை; துறை: அரசவாகை. சோழன் நலங்கிள்ளியை கோவூர்கிழார் பாடியது. | |
| 34 | 'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும், வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, 'நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, அறம் பாடின்றே - ஆயிழை கணவ! 'காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கரு அன்ன புன் புல வரகின் பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, குறு முயற் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், எம் கோன் வளவன் வாழ்க!' என்று, நின் பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்து, சான்றோர் செய்த நன்று உண்டாயின், இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, கொண்டல் மாமழை பொழிந்த நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
| திணை: பாடாண் திணை; துறை: இயன்மொழி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. | |
| 35 | நளி இரு முந்நீர் ஏணி ஆக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் |