| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 876 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 35... | திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவருள்ளும், அரசு எனப்படுவது நினதே, பெரும! அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும், அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, தோடு கொள் வேலின் தோற்றம் போல, ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! நினவ கூறுவல்; எனவ கேண்மதி! - அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ மாக விசும்பின் நடுவு நின்றாங்கு கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; அது நற்கு அறிந்தனை ஆயின், நீயும் நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி குடி புறந்தருகுவை ஆயின், நின் அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
| திணை அது; துறை: செவியறிவுறூஉ. அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது. | |
| 36 | அடுநை ஆயினும், விடுநை ஆயினும், நீ அளந்து அறிதி, நின் புரைமை-வார் கோல், செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் பொலம் |