புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   878
Zoom In NormalZoom Out

38...
 
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் -
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.
 
 
திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி.
 
அவன்,  'எம்  உள்ளீர்?  எம்  நாட்டீர்?'   என்றாற்கு   ஆவூர்
மூலங்கிழார் பாடியது.
 
39
 
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே - ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி).
 
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 
40
 
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
வல்லாளனை; வய வேந்தே! -
யாமே, நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் - என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி - பெரும!
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!
 
 
திணை அது; துறை: செவியறிவுறூஉ. (பாடாண்திணை)
 
41
 
காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழு