புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   881
Zoom In NormalZoom Out

45...
 
நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும் இவ் இகலே.
 
 
திணை: வஞ்சி; துறை: துணைவஞ்சி.
 
சோழன்    நலங்கிள்ளி   உறையூர்   முற்றி   இருந்தானையும்,
அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
 
46
 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே!
 
 
திணையும் துறையும் அவை. (வஞ்சி, துணைவஞ்சி).
 
சோழன்   குளமுற்றத்துத்  துஞ்சிய  கிள்ளிவளவன்  மலையமான்
மக்களை   யானைக்கு  இடுவுழி,  கோவூர்கிழார்  பாடி,  உய்யக்
கொண்டது.
 
47
 
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண் ஆள் செல்வம் எய்திய
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே.
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை)
 
சோழன்  நளங்கிள்ளியுழை நின்று உறையூர்  புகுந்த இளந்தத்தன்
என்னும்  புலவனை,  காரியாற்றுத்  துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று
வந்தான்'  என்று  கொல்லப்  புக்குழி,  கோவூர்  கிழார்  உய்யக்
கொண்டது.
 
48
 
கோதை மார்பின் கோதையானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்,
மாக் கழி மலர்ந்த நெய்தலானும்,
கள் நாறும்மே, கானல்அம் தொண்டி;
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்;
அன்னோற் படர்தி ஆயின், நீயும்
எம்மும் உள்ளுமோ - முது வாய் இரவல! -
'அமர் மேம்படூஉம் காலை, நின்
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே.