| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 884 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 54... | போல இடையின்று குறுகி, செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; இரவலர்க்கு எண்மை அல்லது - புரவு எதிர்ந்து, வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவி கை வண்மைக் கடுமான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலி துஞ்சு வியன் புலத்தற்றே - வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
| திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது. | |
| 55 | ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! - கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், நெடுங் கொடிய நிமிர்தேரும், நெஞ்சு உடைய புகன்மறவரும், என நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, 'பிறர்' எனக் குணம் கொல்லாது, ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், வானத்து அன்ன வண்மையும், மூன்றும், உடையை ஆகி, இல்லோர் கையற, நீ நீடு வாழிய - நெடுந்தகை! - தாழ்நீர் வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன்துறை, கடு வளி தொகுப்ப ஈண்டிய வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
| திணை: பாடாண்திணை; துறை: செவியறிவுறூஉ. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது. |