| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 890 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| கை; துறை: அரசவாகை. சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது. | |
| 67 | அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை, யாம் கையறுபு இனைய, குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழ நல் நாட்டுப் படினே, கோழி உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, வாயில் விடாது கோயில் புக்கு, எம் பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணிய, தன் அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
| திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி. கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது. | |
| 68 | உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, ஈங்கு எவன் செய்தியோ? - பாண! - 'பூண் சுமந்து, அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை, புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், உட்பகை ஒருதிறம் பட்டென, புட் பகைக்கு ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் உறந்தையோனே குருசில்; பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
| திணை அது; துறை: பாணாற்றுப்படை. (பாடாண்திணை) சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. | |
| 69 | கையது, கடன் நிறை |