புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   961
Zoom In NormalZoom Out

301...
 
வண்பரிப் புரவிப் பண்பு பாராட்டி,
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென
வேந்துஊர் யானைக்கு அல்லது,
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே.
 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, தானைமறம்)
 
ஆவூர் மூலங்கிழார் பாடியது.
 
 
 
302
 
வெடிவேய் கொள்வது போல ஓடி,
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்குஇழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணிவணர் கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்இவர் விசும்பின் மீனும்,
தண்பெயல் உறையும், உறை ஆற்றாவே.
 
 
திணை அது; துறை: குதிரை மறம். (தும்பை)
 
வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது.
 
 
 
303
 
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ,
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே - நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்,
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.
 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, குதிரைமறம்)
 
எருமை வெளியனார் பாடியது.
 
 
 
304
 
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார்அரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
எம்முற் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று -
'இரண்டு