| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 962 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 304... | ஆகாது அவன் கூறியது' எனவே. |
திணையும் துறையும் அவை. (தும்பை, குதிரைமறம்) அரிசில்கிழார் பாடியது. | |
| 305 | வயலைக் கொடியின் வாடிய மருங்குல், உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான் எல்லிவந்து நில்லாது புக்கு, சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி, மாண்வினை யானையும் மணி களைந்தனவே. |
திணை வாகை; துறை: பார்ப்பன வாகை. மதுரை வேளாசான் பாடியது. | |
| 306 | களிறுபொரக் கலங்கு, கழல் முள் வேலி, அரிதுஉண் கூவல், அம்குடிச் சீறூர் ஒலிமென் கூந்தல் ஒள்நுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது; விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும் ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு நாடு தரு விழுப்பகை எய்துக எனவே. |
திணை அது; துறை: மூதில் முல்லை. (வாகை) அள்ளூர் நன்முல்லையார் பாடியது. | |
| 307 | ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; வேனல் வரிஅணில் வாலத்து அன்ன, கானஊகின் கழன்று உகு முதுவீ அரியல் வான்குழல் சுரியல் தங்க, நீரும் புல்லும் ஈயாது, உமணர் யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்ப, தெறுவர் பேர்உயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு வெஞ்சின யானை வேந்தனும், 'இக்களத்து, எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, பண்கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சுஅற வீழ்ந்த புரைமையோனே. |
திணை தும்பை; துறை களிற்றுடனிலை. வண்ணக்கண் சோருமருங்குமரனார். | |
| 308 | பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், மின்நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண! சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் வேந்துஊர் யானை ஏந்து முகத்ததுவே; வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை சாந்துஆர் அகலம் உளம் |