| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 963 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 308... | கழிந்தன்றே; உளம்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல் ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் புன்தலை மடப்பிடி நாண, குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. |
திணை: வாகை; துறை: மூதில் முல்லை. | |
கோவூர்கிழார் பாடியது. | |
| 309 | இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல் அரா உறையும் புற்றம் போலவும், கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்று அருந்துப்பின் மாற்றோர், 'பாசறை உளன்' என வெரூஉம் ஓர்ஒளி வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதுவே. |
திணை: தும்பை; துறை: நூழிலாட்டு. | |
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது. | |
| 310 | பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு, உயவொடு வருந்தும் மன்னே! இனியே புகர்நிறம் கொண்ட களிறுஅட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு - மான் உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல் அணலோனே. |
திணையும் துறையும் அவை. (தும்பை, நூழிலாட்டு). | |
பொன் முடியார் பாடியது. | |
| 311 | களர்ப்படு கூவல் தோண்டி, நாளும், புலைத்தி கழீஇய தூவெள் அறுவை, தாதுஎரு மறுகின் மாசுண இருந்து, பலர்குறை செய்த மலர்தார் அண்ணற்கு ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து; சிறப்புடைச் செங்கண் புகைய, ஓர் தோல்கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. |
திணை அது; துறை: பாண்பாட்டு. (தும்பை) | |
ஒளவையார் பாடியது. | |
| 312 | ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி, களிறு எறிந்து பெயர்தல் காளை |